Thursday, 5 March 2015

மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் தட்டச்சர் பணி

தெலுங்கானா மாநில ரங்காரெட்டி மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 22 தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: District and Sessions Court, Rangareddy Recruitment 2015
பணி: தட்டச்சர்
காலியிடங்கள்: 22
சம்பளம்: மாதம் ரூ.8440 - 24,950 + தர ஊதியம் ரூ.2010
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 18 - 34க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் Higher Grade-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் பணி செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஹைதராபாத்தில் மாற்றத்தக்க வகையில் “The Prl. District & Sessions Judge, Rangareddy District, L.B.Nagar என்ற பெயருக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Prl. District & Sessions Judge, District Courts Buildings Complex, Ranga Reddy District at L.B.Nagar, Hyderabad – 500074.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.03.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Notification_Typist_1474_RRDC.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment